Thursday, September 29, 2016

மக்கள் பணத்தை திருடியவனுக்கு ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் கையை வெட்டி தண்டனை (IslamicPunishments)

 


அப்படியே உங்க சட்டங்களை எங்களுக்கும் படித்துத்தாருங்கள் ஐயா. 

பெண்களை கற்பழித்து கொலை செய்து வீதியில் வீசுகிறான் - நீங்கள் கல்லால் எறிந்து கொல்வீர்கள்; நாங்களோ உங்களை காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு அவனை ஜெயிலில் 7 வருடம் போட்டு சாப்பாடும் பாதுகாப்பும் மருத்துவச்செலவும் செய்வோம். சுயசரிதையும் எழுதலாம்.

தங்கைக்கு சீர்செய்ய வைத்திருந்த நகைகளை திருடுகிறான் நீங்கள் கையை வெட்டுகிறீர்கள்.
நாங்களோ உங்களை காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு அவனை ஜெயிலில் 2 அரை வருடம் போட்டு சாப்பாடும் பாதுகாப்பும் மருத்துவச்செலவும் செய்வோம். கல்லுடைக்கும் தொழிலும் உண்டு.

பெண்ணை நடு ரோட்டில் வைத்து வாளால் வெட்டிக்கொன்றாலும் அவனுக்கு மருத்துவச்செலவு, பாதுகாப்பு. அவனை கொல்லவேண்டும் என்றாலும் கரண்ட் கம்பி நாடகம் தேவை. ஆனாலும் ஆயிரம் விசாரணை உண்டு. நீங்களோ கொன்றவனுக்கு காலம் தாழ்த்தாது மரணதண்டனை அல்லது பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்டால் மட்டும் நட்ட ஈடு வழங்குகிறீர்கள். 

குடியை கெடுக்கும் மதுவை முழுதாக தடை செய்கிறீர்கள் மீறினால் சவுக்கால் அடிக்கிறீர்கள். இந்தச்சட்டம் இங்கிருந்தால் எத்தனையோ பெண்களின் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும். எத்தனையோ பெண்கள் பல கணவன்மாரால் தினம்தினம் உதை வாங்கிச்சாவது, கணவன்மாரின் நன்பர்களால் கற்பழிக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கும்.

மது மாது சூது கொலை கொள்ளை என பஞ்சமாபாதகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி குற்றத்தின் எண்ணிக்கையை மிக வெகுவாக குறைத்துள்ளீர்கள். நாங்களோ அவற்றையெல்லாம் பஞ்சமாபாதகங்கள் என்று சொல்வோம். ஆனால் வெள்ளையனின் சட்டத்தின்படி அனைத்துக்கும் லைசென்ஸ் கொடுப்போம்.

நாங்களோ உங்கள் சட்டத்தை காட்டுமிராண்டித்தனம் எனக்கூறிக்கொண்டு கொலை விழுந்தவுடன் மூன்று நாட்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் தேவை என்போம். நான்காவது நாள் கொலையை மறந்துவிட்டு இருக்கும் சட்டமே மனிதநேயமுள்ள சட்டமென்போம்.

உலக மேற்கத்தேய ஊடகங்களும் சில இந்திய காவி ஊடகங்களும் உங்களைப்பற்றி என்னென்னவெல்லாமோ கூறுகின்றன. அது பற்றி எனக்கு அறிவில்லை. ஆனால் நீங்கள் இந்திய நர்ஸுகளை உங்கள் விரல் படாமல் பத்திரமாக திருப்பி அனுப்பியபோது அந்த பெண்கள் இங்கு வந்து உங்களை பற்றி சிறந்ததொரு வாக்குமூலத்தை தந்தார்கள். அவர்களுடன் சேர்த்து உங்கள் சட்டங்களையும் சிறிது அனுப்பியிருக்கலாம். 

Thursday, September 22, 2016

ஈழத்தமிழர் காஷ்மீர் சகோதர விடுதலைக்காக (TamilsForKashmir)

இது ஈழத்தமிழர்களால் அனுப்பப்பட்ட ஒரு பதிவு. அதை நாங்கள் நடுநிலை தவறக்கூடாது என்பதற்காக பதிவிடுகிறோம். மாற்றுக்கருத்துக்களும் பதிவிடப்படும்.

 

போராட்டங்கள் ஓய்வதில்லை.... போராளிகள் வீழ்வதில்லை..... விடுதலைகள் தோற்பதில்லை.

ஈழத்தமிழர் தங்களின் விடுதலை வரலாற்று சகோதரர்களான காஷ்மீர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவழித்து உலகம் முழுவதும் தங்களாலான ஆதரவை தெரிவித்து ஆத்ம பிரார்த்தனைகளையும் செய்கின்றனர்.

காஷ்மீரும் ஈழமும் ஒரு கொடியில் மலர்ந்த இரு மலர்கள். ஈழ மலர் இந்திய ராணுவ ராஜதந்திர துணைகொண்டு இலங்கை அரசினால் சிதைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக துடைக்கப்படவில்லை.

காஷ்மீர் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.... ஆனால் இம்முறை எதிர்ப்பு பலமாக இருக்கிறது. ஈழ விடயத்தில் இந்தியா விட்ட தவறை காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் செய்யாமலிருப்பதே காஷ்மீர் போராட்டத்தின் வலிமைக்கு முக்கிய காரணம். இந்தியா செய்தது தவ்றல்ல. துரோகம்.

காஷ்மீரிகளின் விடுதலை ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் மனங்களில் விடுதலை தீபத்தை மற்றொரு முறை ஏற்றும் என்பதில் சந்தேகமில்லை. காஷ்மீர் விடுதலை அழிக்கப்பட வேண்டுமென்று இலங்கையிலுள்ள ஒவ்வொரு சிங்களவனும் விரும்புகிறான். அது சொல்கிறது ஏகாதிபத்தியங்களின் ஒற்றுமையை.....

 

 

 

 

 

 

 

 

 

 

Tuesday, September 20, 2016

மனுஸ்மிருதி (Manusmriti)

பெண்கள் தலித்கள் பற்றி ஹிந்து தர்மம் சொல்லும் இன்னா நாற்பது. மனுஸ்மிருதி ஓர் ஆய்வு.


Manusmriti மனுஸ்மிருதி 

மனுஸ்மிருதி அல்லது மனு நீதி அல்லது மானுட தர்ம சாஸ்திரம் என்பது இந்து மதத்தினால் மானுட வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட சட்ட நூல். (மேற்கத்தேயர் டச்சு சட்டத்தை வழங்கியதை போல அல்லது இஸ்லாமியர்கள் உலகுக்கு ஷரீயா சட்டத்தை வழங்கியது போல என்று கொள்ளலாம்).

இது பிரம்மாவின் வார்த்தைகள். தர்மத்தின் அதி உயர்ந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் அடங்கிய புனித நூல். இதில் 2690 வசனங்களும் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உபதேசிக்கப்பட்டுள்ளன. 

இது முதல் மனிதராகவும் முதல் இந்து மன்னனாகவும் கருதப்படும் மனு என்பவருக்கு பிரம்மாவினால் செய்யப்பட்ட போதனை. அந்த மனுவின் பெயரினாலேயே முழு மனித இனமும் அழைக்கப்படுகிறது (மனு, மனிதன், மானவ, Man)

இந்து மதத்தின் மத சம்பந்தமான அனைத்து விடையங்களும் பிராமணர்களாலேயே கற்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற வேளையில் மனு நீதியில் பிராமணர்களுக்கு பக்கச்சார்பான நீதி வழங்கப்பட்டிருப்பதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு பிராமணரல்லாதாரால் முன்வைக்கப்படுகின்றது. 

மேலும் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதை பெண்ணுரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் விமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றனர்.

வர்ணங்களின் அடிப்படையில் மனுநீதி தீர்ப்பழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலித்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மனுநீதியின் பிரதியை எரித்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. 

இவ்வாறு குற்றஞ்சாட்டுவோர் எடுத்துக்காட்டாக பின்வரும் சுலோகங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். (சில பதிப்புகளில் எண்கள் வேறுபடலாம் எடுத்துக்காட்டாக 22வது சில பதிப்புகளில் 5/167 எனவும் சில பதிப்புகளில் 5/164 எனவும் உள்ளது) 

1. “ஸ்வாபவ் ஏவ் நரினம்....” – 2/213.

பெண்ணின் இயல்பு இவ்வுலகில் ஆணை வசியம் செய்வது. இதன் காரணமாக, அறிவு பெற்றவர்கள் பெண்களுடன் இருக்கும்கால் பாதுகாப்புடனேயே இருப்பர்.

2. “அவிதம் சம்லம்………..” – 2/214.

பெண்களின் இயல்பை சரியாகப்பெற்ற ஒருத்தியால் முட்டாளை மட்டுமன்றி ஒரு ஞானியைக் கூட அழிவில் இட்டுச்செல்ல முடியும். அவ்விருவரும் ஆசைக்கு அடிமையாகி அலைவர்.

3. “மத்ரா ஸ்வஸ்த்ரா………..” – 2/215.

நல்ல அறிவு பெற்றவர்கள் தங்கள் தாய்மாருடனோ மகள்மாருடனோ சகோதரிகளுடனோ தனித்திருக்கார். ஏனென்றால் காம இச்சை என்பது மிகுந்த வலிமையுடையது. அது உணர்ச்சியை தூண்டிவிடும்.

4. “நவ்த்வாஹே……………..” – 3/8. 

சிவந்த கூந்தலுள்ளவளையோ, மிகுதியான உடல் உறுப்பொன்றை பெற்றவளையோ (எ.கா. ஆறாம் விரல்), அடிக்கடி தேகாரோக்கியம் குறைபவளையோ, உடலில் உரோமம் அற்றவளையோ அல்லது மிகுதியான முடி உள்ளவளையோ மற்றும் சிவந்த கண்கள் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்யக் கூடாது.

5. “ந்ரக்ஷ் வ்ரக்ஷ்………..” – 3/9. 

நட்சத்திரங்களின் பெயர் கொண்டவளையோ, மரங்களின் பெயர் கொண்டவளையோ, நதிகளின் பெயர் கொண்டவளையோ, குறைந்த ஜாதி பெண்களையோ, மலைகளின் பெயர் கொண்டவளையோ, பறவைகளின் பெயர் கொண்ட பெண்களையோ, பாம்புகளின் பெயர் கொண்ட பெண்களையோ, அடிமை பெண்களையோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் பெயர் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.

6. “யஸ்தோ னா பாவேத்…..…..” – 3/10.

நல்லறிவு பெற்றோர் சகோதரன் இல்லாத பெண்ணையோ, சமூகத்தில் பிரபலமற்றவர்களின் பெண்களையோ திருமணம் செய்யக்கூடாது.

7. “உச்சயங்…………….” – 3/11.

நல்லறிவு பெற்றோர் உடல் அங்கங்களில் ஊனங்கள் அற்ற, அழகிய பெயருடைய, யானை போன்று அழகிய நடையுடைய, தலையிலும் உடலிலும் அளவான முடியுடைய மென்மையான கை கால்கள்களும் சிறிய பற்களையும் உடைய பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்.

8. “ஷுத்ர் ஐவ் பார்யா..……” – 3/12.

பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையோ, க்ஷத்ரிய பெண்ணையோ, வைஷிய பெண்ணையோ மட்டுமல்லாது ஒரு சூத்திர பெண்ணைக்கூட திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு சூத்திரன் ஓர் சூத்திர பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.

9. “நா ப்ரஹ்மன் க்ஷத்ரியா......” – 3/14. 

பிராமண, க்ஷத்ரிய, வைஷிய ஆண்கள் ஜாதி மாறி திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு துன்பம் வந்தாலும் அவர்கள் ஒரு சூத்திரப்பெண்ணை திருமணம் செய்யவே கூடாது.

10. "ஹீன் ஜதி ஸ்த்ரியம்……..” – 3/15. 

துவிப்பிறப்பு கொண்ட (பிராமண, க்ஷத்ரிய, வைஷிய) ஆண்கள் அறியாமையால் ஓர் கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்க நேரிட்டால் அதனால் அவர்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் கேவலத்துக்கு அவர்களே பொறுப்பு. இதற்கமைய அவர்களின் பிள்ளைகள் அனைவரும் சூத்திரர்களின் அனைத்து கேவலங்களையும் தம்மில் கொண்டிருக்கும்.

11. “சூத்ரம் ஷைனம்……” – 3/17. 

ஒரு கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்கும் ஒரு பிராமணன் அவனையும் அவனது முழுக்குடும்பத்தையும் இழிவுபடுத்துவதோடல்லாமல் கண்ணியங்களை இழக்கிறான் அத்துடன் பிராமண அந்தஸ்தையும் இழக்கிறான். அவன் பிள்ளைகள் யாவும் சூத்திரர்களே.

12. “தைவ் பித்ரியா………………” – 3/18. 

அத்துடன் (சூத்திரப்பெண்ணை மணமுடித்த) அந்த பிராமணனின் படையல்கள் எதுவும் பூஜைகளின் போது கடவுள்களாலோ அல்லது உயிரிழந்த ஓர் ஆத்மாவாலோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதிதிகளும் அவனுடன் சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள். மேலும் அவன் இறந்த பின் நரகத்தையே அடைவான்.

13. “ச்சண்டலாஷ் ……………” – 3/240. 

ஷ்ரத் திதி பூஜைகளின் போது பிராமணனுக்கு கொடுக்கப்படும் உணவை சண்டாளனோ (சூத்திரன்) பன்றியோ சேவலோ நாயோ அல்லது மாதவிடாய் பெண்ணோ பார்த்தலாகாது.

14. “நா அஷ்னியாத்…………….” – 4/43. 

பிராமணீயத்தை காக்கும் ஓர் உண்மையான பிராமணன் தன் மனைவியுடன் ஒன்றாக உண்ணமாட்டான். உண்ணும்போது அவளை பார்க்கமாட்டான். மேலும் அவள் உண்ணும்போதும், தும்மும்போதும், கொட்டாவி விடும்போதும் அவளை பார்க்கவும்மாட்டான்.

15. “நா அஜ்யந்தி……………….” – 4/44. 

ஒரு பிராமணன் அவனுடைய வலிமையையும் அறிவையும் பாதுகாக்கும் வகையில் கண்ணுக்கு மை பூசும் பெண்களையோ, நிர்வாணமான தன் உடலை கைகளால் தேய்ப்பவளையோ, பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பவளையோ பார்க்கமாட்டான். 

16. “மிர்ஷ்யந்தி…………….” – 4/217. 

வேசித்தனம் புரிபவளிடமிருந்தோ, பெண்களால் ஆளப்படும் குடும்பங்களிடமிருந்தோ, முதல் பத்து நாள் தாண்டாத இழவு வீட்டிலிருந்தோ உணவு வழங்கினால் ஒருவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

17. “பல்யா வா………………….” – 5/150. 

ஒரு சிறுமியோ பெண்ணோ அல்லது ஒரு கிழவியோ சுதந்திரமாக வேலை செய்ய கூடாது. அது அவள் வசிக்குமிடமாக இருப்பினும் சரியே.

18. “பல்யே பிடோர்வஷே…….” – 5/151. 

பெண்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் தனியே தன் காரியங்களில் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.

19. “அஷீலா கம்விர்தோ………” – 5/157. 

ஓர் கணவன் எந்தவொரு சிறப்பு தன்மையும் இல்லாதவனாக இருப்பினும், விலைமாதரிடம் செல்பவனாக இருப்பினும், கெட்டவனாக இருப்பினும், நீதியற்றவனாக இருப்பினும் பெண்கள் அவனை வணங்கி சேவகம் புரிய வேண்டும்.

20. “நா அஸ்த் ஸ்த்ரினாம்……..” – 5/158. 

பெண்கள் எந்தவொரு பூஜைகளையும் செய்யவோ அர்ப்பணிக்கவோ, விரதம் இருக்கவோ கடவுளின் அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் ஒரே கடமை கணவனின் சொல் கேட்பதும் அவனை சந்தோசப்படுத்துவதுமே; அந்த ஒரே காரணத்துக்காக அவள் சுவர்க்கம் செல்வாள்

21. “கமாம் தோ……………” – 5/160. 

(கணவன் இறந்த பின்) அவள் தன்னுடல் அழியும் வரை தூய்மையான மலர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் வேர்களிலும் அமர வேண்டும். தன் கணவன் இறந்த பின் எந்த ஒரு ஆணின் பெயரைக்கூட அவள் உச்சரிக்க கூடாது. 

22. “வ்யாபாச்சரே…………” – 5/167 (சில பதிப்புகளில் 5/164)

கணவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் ஒரு பெண் கேவலப்படுகிறாள், ஒர் தொழுநோயாளி ஆகுவாள், இறந்த பின் ஒரு குள்ள நரியின் கருப்பையை அடைவாள்.

23. “கன்யம் பஜந்தி……..” – 8/364. 

உயர் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரியும் ஒரு பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டாள். ஆனால் கீழ் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரிந்தால் அவள் தண்டிக்கப்படுவதுடன் ஊர்விலக்கு செய்யப்பட வேண்டும்.

24. “உத்மம் செவ்மந்த்சோ…….” – 8/365. 

கீழ் ஜாதிக்காரன் ஒருவன் உயர் ஜாதி பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்தால் கீழ் ஜாதி ஆணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பெண்ணும் கீழ் ஜாதியாக இருப்பின் அவன் அவளுக்குரிய இழப்பீட்டுக்குரிய தொகையை தந்தால் போதுமானது.

25. “யா தோ கன்யா…………….” – 8/369. 

கன்னித்திரை கிழிந்திருப்பவளுக்குரிய தண்டனையாவது அவளை மொட்டை அடித்து அவளின் இரண்டு விரல்களை வெட்டிவிட வேண்டும். அத்துடன் அவளை கழுதை மேல் ஏற்றி பவனிவரச்செய்ய வேண்டும்.

26. “பர்தரம்…………….” – 8/370. 

ஒரு பெண் தன் உயர்வையோ தன் குடும்பத்தின் உயர்வை பற்றியோ பெருமைகொண்டு தன் கணவனுக்குரிய கடமைகளை உதாசீனப்படுத்தினால் அரசன் அவளுக்கு வழங்கும் தண்டனையாவது எல்லோரும் பார்க்குமிடத்தில் அவளை வெறிநாய்களுக்கு முன்னால் எறிதலாகும்.

27. “பிதா ரக்ஷதி……….” – 9/3. 

பெண்கள் சுதந்திரமாக வாழ இயலாதவர்கள் ஆதலால் அவர்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.

28. “இமாம் ஹி சர்வ்………..” – 9/6. 

மனைவி மீது பூரண அதிகாரத்தை செலுத்துவது ஒரு கணவனின் கடமையாகும். உடல் ரீதியாக பலஹீனமான ஆணாகவிருப்பினும் அவனும் தன் பூரண அதிகாரத்தை செலுத்தியே ஆகவேண்டும்.

29. “ப(ட்)டி பர்யம் ……….” – 9/8. 

ஒருவனின் மனைவி கருத்தரிக்கும் போது அவளின் கணவனே அவள் கர்ப்பத்தில் கருவாக உருவாகி அவனே அவளுக்கு மகனாகவும் பிறக்கிறான். இதன் காரணமாகவே பெண் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.

30. “பணம் துர்ஜன்………” – 9/13. 

பெண்களின் கெட்ட குணங்கள் ஆறு அவையாவன: மது அருந்துதல், கெட்டவர்களோடு சேர்தல், கணவனை பிரிதல், அலைந்து திரிதல், நீண்ட நேரம் உறங்குதல், அதிகமாக கதைத்தல் ஆகியனவாம்.

31. “நய்டா ரூபம்……………” – 9/14. 

அவ்வகையான (9/14) பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள், மேலும் வயது பாராமல் எந்த ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார்கள். 

32. “பூன்ஸ் ச்சல்யா…………” – 9/15. 

மேலும் அத்தகையவர்கள் ஆண்கள் மீதுள்ள மோகத்தாலும் அடக்க முடியாத கோபத்தாலும், இரக்க குணமின்மையாலும் தங்கள் கணவன்மாருக்கு உண்மையாணவர்களாக இருக்கமாட்டார்கள்.

33. “நா அஸ்தி ஸ்த்ரினம்………” – 9/18. 

பெண்கள் நம்காரத்தின்போதோ ஜத்காரத்தின் போதோ வேத மந்திரங்களை ஓதக்கூடாது ஏனென்றால் பெண்கள் வேத வசனங்களில் உறுதியும் அறிவும் அற்றவர்கள். மேலும் பெண்கள் சுத்தமற்றவர்கள் மற்றும் அசத்தியத்தை பிரதிபலிப்பவர்கள்.

34. “தேவ்ரா ஸபிண்டா………” – 9/58. 

கணவனுடன் கூடி சந்ததியை பெற்றெடுக்க முடியாத பெண் தன் கணவனின் சகோதரனுடனோ அல்லது கணவனின் வேறு உறவினர்களுடனோ கலந்து சந்ததியை உண்டாக்கிக்கொள்ள முடியும்.

35. “வித்வயம்…………….” – 9/60. 

ஒரு விதவையை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒருவன் இரவில் அவளை அணுகி வெண்ணெய் பூசி ரகசியமாக ஒரு மகனை பெற்றெடுக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் இரண்டாவது மகனை பெற்றெடுக்க முடியாது.

36. “யதா விதி……………..” – 9/70. 

நிலைபெற்ற சட்டப்பிரகாரம் மனைவியின் சகோதரி ஆகிறவள் வெண்ணிற ஆடை அணிந்து தூய எண்ணத்துடன் தன் சகோதரியின் கணவனுடன் ஓர் கர்ப்பம் தரிக்கும் வரை இணைந்திருக்க முடியும். 

37. “அதி க்ரமே……………” – 9/77. 

கணவன் சோம்பேறியாக இருப்பினும் மதுவுக்கு அடிமையானவனாக இருப்பினும் நோயாளியாக இருப்பினும் மனைவி அவனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் இல்லாது போனால் அவளை மூன்று மாதம் விலக்கி வைப்பதுடன் அவள் அணிகலன்களும் களையப்பட வேண்டும்.

38. “வந்த்யாஷ்தமே…….” – 9/80. 

ஒரு மலடி எட்டாவது வருடத்திலும் பிள்ளைகளை இழந்தவள் பத்தாவது வருடத்திலும் பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றவள் பதினோராவது வருடத்திலும் நீக்கப்பட்டு கணவன் வேறொருத்தியை மணக்க முடியும். சண்டை பிடிப்பவளோ உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

39. “த்ரின்ஷா……………….” – 9/93. 

மதச்சடங்குகளை நிறைவேற்றுவதில் ஏதாவது ஒரு தடங்கல் வந்து ஆண் திருமணம் முடிக்கவேண்டி ஏற்பட்டால் இருபத்தி நான்குக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள ஆண் எட்டுக்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட வயதுள்ளவளை திருமணம் செய்ய வேண்டும்.

40. “யம் ப்ரஹ்மன் ஸ்தோ…….” – 9/177. 

ஒரு பிராமணன் ஒரு சூத்திர ஸ்த்ரீயை திருமணம் செய்தால் அவர்களின் மகன் பர்ஷவ் என்றோ சூத்திரன் என்றோ அழைக்கப்படுவான் இதற்கு காரணம் அவன் சமூகத்தில் ஒரு பிணத்தை போன்றவன்.

Wednesday, August 17, 2016

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு (காவி வெறியர்கள் படிக்க வேண்டாம்)

Kashmir dispute

மக்களே ராணுவத்தை கல்லெறிந்து விரட்டும்போது எதற்காக இந்த காஷ்மீர் பிரச்சினை?


போய்த்தொலை என்று விடப்பட்டிருக்க வேண்டிய உதவாக்கரைகள் வாழும் ஒரு நிலப்பகுதியை கைக்குள் வைத்துக்கொள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை லட்சம் கோடிகள் மக்கள் பணம், எத்தனை படைவீரர்களின் உயிர்கள், எத்தனை விதவைகள்.... எதற்கு இந்த வீராப்பு? எந்த ஒரு ராணுவமும் தன் உயிர் இழப்புக்களை குறைத்தே காட்டும். உண்மையில் எத்தனை பேர்களை கொன்றார்களோ தெரியாது...

தீர்மானம் எடுப்பவர்கள் எல்லோரும் பணக்கார அரசியல்வாதிகள். அவர்களுக்கு யுத்தமும் வேண்டும் காஷ்மீரும் வேண்டும். ஆனால் அவர்களின் பிள்ளைகள் யாரும் காஷ்மீரில் ராணுவத்தில் சேர்ந்து போரில் நேரடியாக ஈடுபடமாட்டார்கள். 

வடகிழக்கு மாநிலங்களில் கற்பழிப்புகள் நடாத்துவோம், அவர்களை மாற்றாந்தாய் பிள்ளை போல் பார்ப்போம். போலீஸ் பாதுகாப்பில் மசூதியை உடைப்போம், உடைத்த மசூதியையும் கட்டிக்கொடுக்கவும் மாட்டோம். தீவிரவாதத்தை வெறுக்கும்படி அந்த இளைஞர்களை கேட்போம். நடக்குமா இதெல்லாம்?

இங்கே பேஸ்புக்கில் இருந்து கொண்டு சில காவி வெறியர்கள் வீர வசனம் பேசுவர். "சண்டைக்கு வாடா, கொண்ணுடுவேன்.. கிழிச்சுடுவேன், மேப்பிலிருந்தே தூக்கிடுவேன், ஐயாம் வெய்டிங்க்" எண்டெல்லாம் பாகிஸ்தானிடம் பஞ்ச் டயலாக் பேசும் ஆனால் வந்து ராணுவத்தில் சேரு எண்டு சொன்னால் "வீட்டில விடமாட்டாங்க பாஸ்" எண்டு ஜகா வாங்கிடும். 

காஷ்மீரிகளிடம் கல்லடி வாங்கும் நிலைக்கு இந்திய ராணுவம் தள்ளப்பட்டிருப்பது அதர்மம். 

ஒரே தீர்வு... பிரச்னையை விட்டு ஒதுங்குங்கள். மீதமாகும் பல பில்லியன் கோடி பணத்தில் முழு இந்தியாவின் வாழ்க்கைத்தரத்தையும் வெகுவாக உயர்த்தி மிகப்பெரிய முன்னேற்றமடைந்த நாடாக மாற்ற முடியும். இந்த முஸ்லிம்கள் வசிக்கும் காஷ்மீர் இந்திய வளர்ச்சியின் தடைக்கல்லாக இருக்கும் என்பதை அறிந்தே வெள்ளைக்காரன் அதை பாகிஸ்தானுடன் சேர்க்காமல் விட்டுவிட்டு சென்றான். எத்தனை காலம்தான் விரும்பாதவர்களை அடக்கி ஆட்சி செய்ய முடியும்?

பாகிஸ்தானுடன் இருந்த பங்களாதேஷ் இன்று இந்தியாவின் நண்பன். காஷ்மீரை மேலும் மேலும் ரத்தக்களரியாக்கி அதற்காக முடிவில்லாமல் பெறுமதியான இந்திய ராணுவ வீரர்களின் உயிர்களை பலி கொடுப்பதை விட காஷ்மீரை இந்தியாவுக்கு ஆதரவான ஒரு நட்பு நாடாக மாற்றி ஐநாவில் இன்னுமோர் ஆதரவுடன் மேல் நோக்கிச்செல்வது இந்தியாவின் வல்லரசு கனவை நனவாக்கும்.

இப்போதே இந்தியா சார்பான ஒரு நாட்டை இந்தியாவே உருவாக்கினால், போராட்டம் மூலம் அல்லது அந்நிய தலையீடுகள் மூலம் நாடு உருவாகி அது பாகிஸ்தானின் நட்பு நாடாக வருவதை தடுக்கலாம். இப்போது உள்ள ஆட்சிக்கு உதவி செய்து காஷ்மீரை நட்பு நாடாக்கி கொள்வதே இந்த முடிவற்ற காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவுக்கு சாதகமாக தீர்த்து கொள்ளும் சிறந்த ராஜதந்திர வழி.

நடு நிலையாக சிந்தித்து கமெண்ட் போடுங்கள்.

Monday, August 15, 2016

இந்திய தமிழர்களின் உண்மையான தொப்புள்கொடி உறவுகள் யார்? Sri Lankan Estate Tamils



தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் மலையகத்தமிழர்களே அன்றி யாழ்ப்பாண உயர்சாதிகள் அல்ல. யாழ்ப்பாண தமிழர்கள் சித்தி, சித்தப்பாவின் பிள்ளைகள் போன்று. ஆனால் சாதி அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறான போராட்டங்கள் மூலம் இலங்கையில் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்தியத்தமிழர்களை மறைத்துவிட்டார்கள்.

நூற்றாண்டுகளாக அடிமைகள் போன்று இலங்கை அரசாலும் யாழ்ப்பாணத்தமிழர்களாலும் ஆளப்படும் இந்திய தோட்டத்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களின் வீடுகளிலும் கொழும்பிலுள்ள அவர்களின் வர்த்தக நிலையங்களிலும் அடிமை சேவகம் பார்த்து வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? 

இந்தியத்தொழிலாளர்களின் சனத்தொகை இன்று இலங்கை தமிழர்களின் சனத்தொகையை கடந்து சென்றுகொண்டிருப்பது இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டது. 

என்றாலும் புலிகளின் அடிவருடிகளாக செயல்படும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ வேண்டுமென்றே போராட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறார்கள் என்பதே உண்மை.


பாலியல் தொழில் (Prostitution)

தாய்லாந்து இந்தியாவில் வேசித்தொழில்

 

பாலியல் தொழில், வேசித்தொழில், தேவடியாள் தொழில் (இந்த சொல்லின் பாவனை கிராமப்புற தமிழில் அதிகம்), உடம்பை விற்றல் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த தொழில் திருமணம் செய்யாமல் அல்லது திருமணத்துக்கு புறம்பாக ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவதை குறிக்கும். சம்பளத்தை பொறுத்து பாலியல் தொழில், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என்று பெயர்கள் வேறுபடும். எல்லோரும் செய்வது ஆணின் உடம்பை கட்டிப்பிடிப்பதற்கு பணம் பெறுவதே.  

இந்த தொழிலில் விரும்பி இணையும் பெண்கள் அதிகம். இவர்கள் தன் வருமானத்துக்காக பொது இடங்களில் பிச்சையெடுப்பதை கேவலமாக நினைத்து இந்த "தொழிலில்" இணைகின்றார்கள். (இந்த இடத்தில் பிச்சையெடுத்தால் கூட எடுப்பேனே தவிர வேசித்தொழில் செய்யமாட்டேன் என்று வாழும் பிச்சைக்கார பெண்களை பாராட்டியே ஆகவேண்டும்.  கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுவதும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது. 


இது இவ்வாறு இருக்க சில உலகின் கேவலமான கலாச்சாரத்தை கொண்ட ஒரு சில நாட்டு அரசுகளே உயிரினும் மேலாக கண்ணியமாக மதிக்க வேண்டிய தன் நாட்டு பெண்களை, தாய்க்குலத்தின் சதையை காம வெறிகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கும் விற்று பணம் சம்பாதிக்கும் உத்தியோகபூர்வமான வேசித்தனமும் நடைபெறுகிறது. 

இப்போது இந்தியாவும் முன்னரைவிட இத்தொழிலில் தாய்லாந்தை பார்த்து "முன்னேறி" வருகிறது. மும்பையில் உள்ளது போன்று ஏனைய இடங்களிலும் இந்த தேவடியாள் தொழில் சிறக்க வேண்டுமாம்.

எத்தனை பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் இதனால் சீரழிகின்றன. பாலியல் நோய்கள் ஏற்பட்டு வயதானபின் மனநோய் ஏற்பட்டு "கஸ்டமர்" இல்லாமல் அந்த பெண்கள் ஓரங்கட்டப்பட்டு பித்துப்பிடித்து அலையும் காட்சிகள். இவற்றை இந்த நாட்டு அரசுகள் சிந்திப்பதில்லை.

தாய்லாந்தில் பௌத்த மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை. 

இந்தியாவில் இந்து மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ யூத மதங்கள் இதை நிறுத்துவதில்லை என்பது போக அதற்கும் மேலே ஒரு படி போய் அப்பா அங்கிள் கேம் என்ற ஓரினப்புணர்ச்சியையுமல்லவா (Homosexual) ஆதரிக்கிறது. 

மனிதனை ஒழுக்க ரீதியாக நல்வழிப்படுத்த முடியாத மதங்கள் இருந்தென்ன பயன்? இதைத்தானே பகுத்தறிவு தந்தை பெரியார் ஈவேரா வும் கேட்டார்.


மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.

Wednesday, July 13, 2016

ஐக்கிய நாடுகள் சபை (United Nations) - ஒரு யதார்த்தப் பார்வை

ஐக்கிய நாடுகள் சபை (United Nations) - ஒரு யதார்த்தப் பார்வை



ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து1945 இல் நாடுகளின் லீக் (League of Nations) என்ற அமைப்பை பிரதியிட்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமைச்செயலகம் அமெரிக்காவில் நியூயோர்க் சிட்டி (New York City) இல் உள்ளது. 

எழுத்தில் உள்ள ஐநா வின் நோக்கங்கள் சமாதானம், பாதுகாப்பு, மனித உரிமை, சமூக பொருளாதார மேம்பாடு, சூழல் பாதுகாப்பு, பஞ்சம் யுத்த காலங்களில் மனிதாபிமான உதவிகள் போன்றவைகளாகும்.

ஆனால் இந்த அமைப்பு இன்று தன் நோக்கங்களிலிருந்து தடம் புரண்டு வேறு ஒரு பாதையில் பயணிப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். 

ஐநா வுக்கான நிதியுதவியில் 22% அமெரிக்காவிடமிருந்தே கிடைக்கிறது இதனால் அமெரிக்கா ஐநாவை தன் சொத்தாக, தனது தனிப்பட்ட நலன்களுக்கு பாவித்துக்கொண்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் உலக நலன்கள் புறக்கணிக்கப்பட்டு பல லட்சம் உயிரிழப்புகளுக்கு ஐநா துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐநா உருவாக்கப்பட்ட தனது இலக்குகளை அடைந்துள்ளதா அல்லது ஒரு சில நாடுகளின் சுயலாபங்களுக்கான வடிகாலாக அமைந்துள்ளதா? 

~காஷ்மீரில் அரை நூற்றாண்டுக்கும் முந்தைய பிரச்சினை - ஐநாவால் வழங்கப்பட்ட "தங்களை யார் ஆளவேண்டும் என்று மக்களே தீர்மானிக்க வேண்டும்" என்ற முடிவை இந்தியா "அந்நிய தலையீடு" தேவையில்லை என்று கூறி தூக்கியெறிந்தது. ஐநா என்ன செய்தது?

~இலங்கையில் வடகிழக்கு மக்களின் இன்றைய நிலைக்கு ஐநா தலையீட்டை இலங்கை "அந்நிய தலையீடு" தேவையில்லை என்று கூறி நிராகரித்தது. இந்தியா இதை ஆதரித்தது. இலங்கைக்கு வழங்கப்படும் தீர்வில் தலையிட்டு காஷ்மீர் மக்கள் தங்களுக்கும் அந்தத்தீர்வு வேண்டும் என்று கேட்டு விட்டால் சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாகிவிடும். இதனால் இலங்கைக்கு ராணுவ பொருளாதார உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை அனைத்தையும் ஐநா பார்த்துக்கொண்டேயிருக்கிறது. திருடனிடமே குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை வழங்கியதை தவிர இலங்கையில் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு வழங்கியதா?

~அதே வேளை தென்சூடான், கிழக்குத்திமோர் போன்ற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் இஸ்லாமிய நாடுகளிலிருந்து நனிநாடு கேட்கும் போது மாத்திரம் அவசர அவசரமாக பிரித்துக்கொடுத்து சாதனைகளை நிலைநாட்டும். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாமல் விட்டதுதான் மற்ற தனிநாட்டு கோரிக்கையாளர்களின் தவறா?

~வியட்நாமை எந்த ஒரு காரணமுமின்றி கம்யூனிஸத்தை பின்பற்றிய ஒரே குற்றத்துக்காக பொய்க்காரணங்களை கூறி இழப்புக்களையும் பொருட்படுத்தாமல் துவம்சம் செய்ததையும் வேடிக்கைதானே பார்த்தது இந்த ஐநா.

~ஈராக்கில் பேரழிவு ஆயுதம் உண்டு என்று பொய்யான காரணத்தை கூறி ஐநாவின் எதிர்பையும் மீறி ஈராக்கை அழித்து நாசப்படுத்தி எண்ணைவளங்களை தங்கள் கம்பெனிகளுக்கு எடுத்துக்கொண்டு முடிவற்ற ஒரு உள்நாட்டு யுத்தத்தை மூட்டிவிட்டு பின்னர் பேரழிவு ஆயுதம் இருக்கவில்லை, தங்கள் உளவுத்துறை ஒரு சிறு தவறை செய்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியதையும் கையாலாகாதனத்துடன் வேடிக்கை பார்த்ததை தவிர இந்த ஐநா வேறு என்ன செய்தது?

~இஸ்ரேல் என்ற  பேரழிவு அணு ஆயுதங்களை எந்த அணு ஆயுத ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் தயாரிக்கும் ஒரு நாட்டை எந்த ஒரு நிபந்தனையுமின்றி அமெரிக்கா பாதுகாப்பதுடன் மனித குலத்துக்கெதிராக குழந்தைகளை கொன்று குவித்து அந்த நாடு செய்யும் குற்றங்களையும் அமெரிக்கா தன் "வீட்டோ" ரத்ததிகாரத்தின் மூலம் பாதுகாப்பதை தடுக்க சக்தியற்று இருப்பதை விட இந்த ஐநா சாதித்தது என்ன?

~அமைதியாக இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு காரணமாக காட்டி அமெரிக்கா இன்று சுடுகாடாக்கிவிட்டிருக்கிறது. இதை தடுக்க ஐநா என்ன செய்தது?

~அம்மை நோயை முற்றிலுமாக அழித்து விட்டோம் என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உலக சுகாதாரஸ்தாபனம் அறிக்கை விடுவதற்கு காரணம் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் இந்த பேரழிவு வைரஸை குப்பிகளில் அடைத்து உயிரியல் ஆயுத உள்நோக்கத்துடன் பாதுகாக்கின்றன. இதை தடுக்கக்கூட ஐநாவால் முடியவில்லையே. 

இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இருந்து திருடர்களையும் யுத்தவெறியர்களை பாதுகாப்பது அவசியம்தானா? வீட்டோ ரத்ததிகாரம் உள்ளவரை ஐநாவால் நடுநிலையாக இயங்கமுடியாது என்பதே நிதர்சனம்.

Thursday, March 10, 2016

லெமூரியா (Lemuria) கண்டம், குமரிக் கண்டம் என்பன பற்றிய தெளிவான ஆய்வு

லெமூரியா கண்டம் உண்மையா? 
குமரிக்கண்டம் என்பது உண்மையா? 
லெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்றா?

(ஒரு விரிவான ஆய்வு)



படம்: குமரிக்கண்டம் பற்றி அதன் ரசிகர் ஒருவர் வடிவமைத்த படம்.

இவை பற்றி சில ஞானப் பழங்கள் சொல்லும் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக நடுநிலையாக விஞ்ஞானபூர்வமாக ஆராய்வோம். (முடியுமான வரை இவ்வகையான ஆதாரங்களை திரட்டியுள்ளேன். ஏதாவது விடுபட்டிருந்தால் அறியத்தாருங்கள்)

Sunday, March 6, 2016

பெண்ணியம் (feminism): இலகு தமிழில்

பெண்ணியம் (feminism): இலகு தமிழில்



நீங்கள் எங்கு பார்த்தாலும் பெண்ணியம் பற்றி புரிந்து கொள்ள முடியாத அதிமேதாவித் தனமான கட்டுரைகளே நிறைந்திருக்கும். இதற்குக்காரணம் இதை எழுதும் பெரும்பாலோர் ஊடகவியலாளர்கள். அது சரி ஊடகவியலாளர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?
இருவரும் கற்றது ஒரே பாசறையில்தான்(கட்டுரையை வாசிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்).

விடயத்துக்கு வருவோம்.
இது எங்கே யாரால் எப்போது எதற்காக துவங்கப்பட்டது?
விடைகள் ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்தது.

விடைகள்:

யாரால்: 
பெண்களால் என்று சொல்லப்படும். அது உண்மைக்கு பூசப்பட்ட பொய் முலாம். ஒரு ஆண்களின் கூட்டம் பின்னாலிருந்து சில பெண்களை இயக்கியது என்பதே உண்மை.

எங்கே: 
கீழைத்தேய நாடுகளில்தான் பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது. ஆகவே இங்கேதான் துவங்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது மேற்குலகில் உருவானது.
அது அந்தக்காலத்தில் மேற்குலகிலும் பெண்களுக்கு உரிமை இருக்கவில்லை என்று நீங்கள் கருதினால் அதுவும் தவறு ஏனென்றால் அடுத்த கேள்விகளை பாருங்கள்.

எப்போது:
புதிய உலக ஒழுங்கின் ஆரம்ப காலம் (18ம் நூற்றாண்டுக்கு பின்னர்)

எதற்காக: 
பாரிய இலக்குகளை வைத்திருந்தார்கள். இந்த இலக்குகளுக்காக இவர்கள் பயன்படுத்தும் பல நூற்றுக்கணக்கான வழிகளில் ஒன்றுதான் இந்த பெண்ணியம்.
இவர்களின் பிரதான இலக்கு- காலணித்துவ யுகத்திற்கு பிறகு நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கிய பின்பும் உலகை மறைமுகமாக ஆட்சி செய்வது. எப்படியென்று யோசிக்கிறீர்களா?

ஆட்சி செய்வதன் நோக்கம் தாம் சரியெனக் கருதும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. காலணித்துவக் காலத்தில் காலணித்துவ நாடுகளின் கொள்கைகள் சட்டமாக இருக்கும். சுதந்திரத்துக்கு பின் சுதேச சட்டங்கள் தானே வர வேண்டும்? 
ஆனால் விரும்பமாட்டார்கள். காலணித்துவ சட்டத்தையே அடிமை நாடுகள் சுதந்திரத்துக்கு பிறகும் பின்பற்ற வைத்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு. அது மறைமுக ஆட்சி. (இந்தியாவின் சட்டத்தை இய்ற்றிய அம்பேத்கார் எங்கே கல்வி கற்றவர்? புரிகிறதா?)

அவர்களின் பிரதான இலக்கு உலகை படைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்ற கொள்கையை நம்பாத ஒரு மிகப்பெரும் சமுதாயத்தை (Godless world) உருவாக்குவதே. இதில் மதங்களில் தீமையாக கூறப்பட்ட பெரும்பாலான விடயங்கள் ஆகுமாக்கப்படும். 

Eg: 
விபச்சாரம், தன்னினச்சேர்க்கை,  என்பது உரிமையாகவும்
கொலை என்பது மரண தண்டனை வழங்கக்கூடிய குற்றமில்லை என்றும்
பாலியல் பலாத்காரம் சிறிய குற்றம் என்றும்
குற்றவாளிகளை எல்லா வசதிகளையும் கொடுத்து பராமரிப்பதும்
இன்னும் மற்றும் அனைத்து குற்றங்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சில வேளை சில குற்றங்களை எதிர்ப்பது போல் நடிப்பார்கள். ஆனால் அந்தக்குற்றத்துக்கு தேவையான அனைத்து சூழலையும் ஏற்படுத்துவார்கள். துப்பாக்கிக்கு அனுமதி வழங்கிவிட்டு கொலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதை போல.

குற்றங்களை அதிகரிக்கச்செய்ய சூழலை மாற்ற வேண்டும்.
•மது பாவனை அதிகரிக்க வேண்டும். (ஆண்களை ஏற்கனவே சீரழித்தாயிற்று) 
•பெண்களும் மது அருந்த வேண்டும் (பெண்சமத்துவம்)
•விபச்சாரத்திற்கான தூண்டல்கள் பார்க்குமிடமெல்லாம் இருக்க வேண்டும்
•பெண்களின் மர்ம உறுப்புகள் நேரடியாகவோ இறுக்கமான ஆடைகள் மூலமாகவோ வெளித்தெரிய வேண்டும் (பெண்ணுரிமை)
•பெண்கள் ஆண்களுடன் சகஜமாக கட்டி உறவாட வேண்டும் (பெண்சமத்துவம், சினிமா நடிகர் நடிகைகளை கொண்டு இதை அடைவார்கள். இப்போது அரசியல்வாதிகள் கூட முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள்)
•Pornography என்பது தனிமனித உரிமை என்பார்கள். தடை செய்யும் அரசை மீடியாவின் உதவியுடன் வீழ்த்துவார்கள்.
•ஆயுதப்பாவனையை அதிகரிப்பார்கள்


ஆண்களுக்கு மத்தியில் இவற்றை பரப்புவது எளிதாக இருந்தது. ஆனால் பெண்கள் பின்வாங்கினர். அதற்கான காரணம் அந்தந்த கலச்சாரங்களில் இருந்த ஒழுக்க விழுமியங்களை அவர்களில் அதிகமானோர் பின்பற்றினர். இதை பெண்களிடத்தில் நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் பெண்களையே இதில் பிரச்சாரகர்களாக்க வேண்டும் என அறிந்து கொண்டு பெண்ணுரிமை இயக்கங்களை துவங்கினார்கள். 
சினிமாவை துணைக்கு அழைத்தார்கள். சினிமாவை Porn என்றும் சாதாரண சினிமா என்றும் இரண்டாக பிரித்து சாதாரண சினிமாவில் வரும் ஆபாசங்கள் porn அல்ல கலைத்துவம் என்று கூறி மக்களை நம்பச்செய்து. சினிமாவில் நிர்வாணமாக நடிப்பது நடிப்பாற்றலின் உச்சக்கட்டம் என்று சொல்லி விருதுவழங்க ஆரம்பித்தார்கள். அந்த விருதுகளின் பெருமைகளை அவர்களின் மீடியாக்கள் பேசிக்கொண்டிருக்கும்.

சினிமா நடிகர் நடிகைகள் ஆடைக்குறைப்பு செய்வது Fashion என்று பறைசாற்றுவார்கள். முறைதவறிய காமத்தை திரையில் காட்டி அவர்களின் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள். எந்த நடிகர் நடிகைகளாவது ஒழுக்கம்(?) அது இது என்று பேசினால் சில நாட்களில் அவர் மீடியாக்களால் கண்டுகொள்ளப்படமாட்டார். மார்கெட் இழந்தவர் என்று ஓரங்கட்டப்படுவார்.

அழகு ராணிப்போட்டிகள் நடத்தி இறுக்கமான கலாச்சாரம் உள்ள நாடுகளில் பிகினியை மேல்தட்டு மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாக்குவார்கள். நோக்கத்தை அடைந்துவிட்டால் அந்த நாட்டு அழகிகளை பின்னர் கண்டுகொள்ள மாட்டார்கள். (அழகிகள் முடிந்து விட்டார்களோ)

பெண்ணுரிமையையும் Journalism ஐயும் ஒரே பாசறையில் கற்றுக்கொடுப்பார்கள். ஆகவே பெண்ணுரிமை என்ற பெயரில் கீழைத்தேய கலாச்சாரங்கள் அவமதிக்கப்பட்டு இவை காலத்துக்குதவாதவை என்று தீவிரமாக பிரச்சாரம் செய்யப்படும். நோபல் பரிசுகள், விருதுகள் வழங்கப்படும். 

முதலில் சாதாரண Ladies club ஆக ஆரம்பிக்கப்பட்டு சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவார்கள்(நல்ல விடயம்). 
ஒரு நாள் திடீரென்று ஒரு மேலைத்தேய அல்லது அங்கு கல்வி பெற்ற கீழைத்தேய பெண்களை Chief guest ஆக கூட்டிவருவார்கள். அவர்கள் சாதாரணமாக மது அருந்துவார்கள் அசால்ட்டாக சிகரட் புகைப்பார்கள். கொடுத்தால் தவிர்ப்பது நாகரீகம் இல்லை என்பார்கள். இதில் சில பெண்கள் கவரப்படுவார்கள்.
இவ்வாறு விஷ விதைகள் விதைக்கப்படும்.
இப்படிப்பார்த்தால் முன்னர் இருந்த பாரத நாடு ஒரு நாகரீகம் அறிந்திராத காட்டுமிராண்டிகளின் கூடாரம். கழிசடைகளின் கழிவறை. ஆனால் இவற்றை நேரடியாகக் கூறமாட்டார்கள் ஏனென்றால் மக்கள் பின்னியெடுத்து விடுவார்கள் என்று தெரியும். 

இவ்வாறு கவரப்பட்ட அந்த சில பெண்கள் பின்னர் தலைமைப்பொறுப்புக்கு வருவார்கள். விபச்சாரிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அசிங்கங்களை இவை "அசிங்கம்" இல்லை என்பார்கள். ஏனென்றால் இவர்களின் குருநாதர்களின் "அசிங்கத்துக்கான" வரைவிலக்கணம் வேறு. 

ஓரினச்சேர்க்கை பாலினமாற்றம் என்பன பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படுகிறது அவற்றை மாற்றக்கூடாது என்று அரைகுறை விஞ்ஞானம் பேசுவார்கள் (இது பற்றிய விஞ்ஞானக் கட்டுரை பின்னர் எழுதுகிறேன்). 
குற்றம் செய்பவன் கூட அடக்கமுடியாத கோபத்துக்கான பரம்பரை இயல்புகளை கொண்டிருப்பவன்தான் அதற்காக குற்றம் செய்வது அவன் உரிமை என்று கூறுவதில்லை. இவ்வகையான பரம்பரை அலகுகள் (Polygenic) புறச்சூழல் காரணிகளால் (External environmental influences) மாற்றப்படக்கூடியவை. இவற்றை அந்தந்த கலாச்சாரங்களும் நாகரீகங்களும் தீர்மானிக்கும். இந்தியாவில் கூட திராவிடர் கலாச்சாரம் பல்வேறு வழிகளில் ஆரியர்களின் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. 

இயற்கை சூழல் உடலமைப்பு கலாச்சாரம் மதம் என்பன இக்காரணிகள். இவற்றில் மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவது மதங்கள். இவர்களுக்குத்தான் மதங்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கை இருக்கிறதே இதற்காக இங்குள்ள மதங்கள் கூறும் ஒழுக்கங்களின் வரைவிலக்கணத்தை மாற்றத்தொடங்கினார்கள். 

இதற்கான ஏற்பாட்டில் ஒன்றுதான் பெண்ணியம் (Feminism). மேலோட்டமாக பார்த்தால் "அட சூப்பரு" என்று விஜய் டிவியின் ம.க.ப. ஆனந்த் போல கத்தத்தோன்றும். ஆனால் உள்நோக்கங்கள் நச்சு விதைகள். 

பெண்ணியம்தான் இறுதியாக நடந்த கலச்சரத்தாக்குதல் அல்ல... இன்றுவரை நடக்கும் ஜல்லிக்கட்டு தடை போன்றவையும் இவ்வகயான கலாச்சார (மற்றும் பொருளாதார) தாக்குதல்களே... (இது பற்றி தனி விளக்கம் உண்டு).

இந்த நவீன பெண்ணியவாதிகளை உருவாக்கியதில் சமூகங்களுக்கும் பங்குண்டு. மதங்களின் பெயரால் மதங்களுக்குள் நுழைந்த பிழையான சித்தாந்தங்களை கண்டறிந்து மதங்களை தூய்மைப்படுத்த அந்தந்த மதங்கள் தவறியதும் ஒரு காரணம் (மதங்களை தூய்மைப்படுத்த உண்மையில் புறப்பட்ட சிலரையும் மதவாதி, அடிப்படைவாதி என்று முத்திரை குத்துவதையும் செய்வார்கள் என்பது வேறு கதை). மற்றும் சில ஆண்களின் பெண்கள் மீதான கொடுமைகளுக்கு சட்டங்கள் தண்டனை வழங்க தவறியமை, போன்றவை....

இவற்றை மீடியாவின் உதவியுடன் இவை மட்டுமே நாட்டில் நடப்பதாக பிரச்சாரம் செய்து தங்கள் தேவையை சாதித்துக்கொண்டார்கள். 

இறுதியாக ஒரு உதாரணம்:

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை.
இவர்களாலேயே வளர்க்கப்பட்ட கமலாதாஸ் என்ற பெண்ணியவாதி (தன் பாலியல் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் Biography வெளியிட்டவர், தன்னையே நிர்வாணமாக வரைந்து கண்காட்சி நடத்துமளவுக்கு சென்றவர்) பின்னர் இஸ்லாம் சமயத்தில் இணைந்து கடுமையான ஆடைக்கட்டுப்பாடுகளை பேணத் தொடங்கினார். என்ன நடந்தது? நீங்கள் நினைப்பது சரி.
அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அதே பெண்களால் நிராகரிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். மீடியாக்களால் புறக்கணிக்கப்பட்டார். இவரைக் கொண்டாடிய சில மீடியாக்களே இவரை மனநிலை பிறழ்ந்தவர் என்று காட்ட முற்பட்டன. 


Saturday, March 5, 2016

இந்திய இலங்கை பிரிவினைவாதங்கள்

பிரிவினைவாதம், சுதந்திர(?) போராட்டம். 

 







விரும்பாதவர்களை ஏன் ஆட்சி செய்ய வேண்டும். இந்தக்காஷ்மீரை போய்த்தொலை என்று விட்டிருந்தால் இன்று இந்தியா வல்லரசாகியிருக்கும். 

ஏலவே அதிகமான இளம் ராணுவ வீரர்களை பலிகொடுத்தாயிற்று. இன்னும் எத்தனை பேரை அந்தக்கடுங்குளிரிலும் பனியிலும் பலி கொடுப்பது? இன்னும் எத்தனை இளம்பெண்களை விதவைகளாக்குவது? இருதரப்பும் நிறுத்தப்போவதில்லை என்றால் இது இப்படியே தொடர்ந்தால் யாருக்கு லாபம்?

காஷ்மீரை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் இதை வைத்துக்கொண்டு மதவாத அரசியல் நடத்தும் சுயநலவாத அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள். 

காஷ்மீர், ஈழம் போன்ற பிரச்னை உள்ள இடங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 

மலேஷியா சிங்கப்பூரை உதறியது.... இன்று மலேசியா ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்து வருகிறது. இரு நாடுகளும் நல்லுறவையும் பேணுகின்றன. இந்திய இலங்கை மத்திய அரசுகளுக்கு இது ஓர் நல்ல உதாரணம்.

ஆனால் ஒரு விடயம். காஷ்மீரை கொடுக்க முன் பங்களாதேஷ் போன்று அதை நட்பு நாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் (கஷ்டம்தான் ஆனாலும் வெள்ளைக்காரனிடம் இந்த பிரித்தாளும் தந்திரத்தை கற்றுக்கொள்ளலாம்)
 
இதை இந்தியாவும் இலங்கையும் உணர்ந்து அன்றே செய்திருந்தால் இன்று இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்திகளாகி இருக்கும். 
சிங்கப்பூர் மலேசிய ஆட்சியாளர்கள் எழுபதுகளில் இலங்கையின் வளர்ச்சி உள்நாட்டுக்கட்டமைப்பை பார்த்து பாடம் கற்றார்கள். ஆனால் முப்பது வருடகால யுத்தம் இலங்கை அரசுக்கு கொடுத்தது என்ன? தமிழர்களுக்க்கு கொடுத்தது என்ன?

இந்தியனா, தமிழனா?

சிந்திப்பதற்கு மட்டும்.... 


(இந்த புகைப்படத்தின் உறுதித்தன்மை தெரியாது. யாரோ விக்கிப்ப்டியாவுக்கு இட்டிருந்ததை நான் சுட்டு இங்கே போட்டுள்ளேன்)

இந்தியா உன் நாடு அல்ல....
அது ஹிந்தி பேசும் ஆரியர்களின் நாடு.... 
நீ தமிழன்....
முன்னர் ஒரு காலத்தில் தனி நாடு கண்டிருந்தவன்....
இன்று பெயரில் மட்டுமே நாடு ஒட்டிக்கொண்டிருக்கிறது....
நீயோ வடக்கிடம் அடிமை பட்டுக்கிடக்கிறாய்....
உன் உடன் பிறப்புகள் இலங்கையில் கொல்லப்படுவதற்கு உதவியது உன் நாடு என்று கூறப் போகிறாயா?...
அல்லது அவர்களின் இறப்புக்கு கண்ணீர் விடுவதற்கு கூட ஹிந்திக்காரனிடம் அனுமதி பெறவேண்டி இருக்கும் உண்மையை உணரப்போகிறாயா?...
புரிந்து கொள் தமிழ்"நாடு" என்று பெயரை வைத்து உன் அரை மணி நேர உண்ணாவிரத தலைவர்கள் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.... 
நீ இந்தியனல்ல.... 
ஹிந்திக்கார ஆரியனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் நாடற்ற தமிழன்.!!!


தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சோழ்ப்பேரரசின் கொடி பறந்தது. எந்த ஹிந்திக்காரனும் வாலாட்ட முடியவில்லை. ஆனால் இன்று ஹிந்திக்காரனின் கொடி பறக்கிறது. நாடிழந்து மானமிழந்து வடக்கிடம் கையேந்தி நிற்கிறான் தமிழன். 

என்றும் தமிழர்கள் தன் பழைய சாம்ராஜ்ஜியங்களை சிந்திப்பதை மறக்கடித்து அவனின் காலடியில் இருப்பதை உறுதிப்படுத்த பார்ப்பண சுவாமிகளை இங்கே விதைத்துள்ளான்.

சிலர் மெசேஜ் பண்ணுகிறார்கள் இது துரோகம் என்று
அவர்களுக்கு சொல்வது இதுதான்:

அடிமைத்தனத்தில் மூழ்கிக்கிடப்பவனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை கொண்டவனை பார்த்தால் துரோகியாகத்தான் தெரியும். எங்கே உன் பாண்டிய நாடு? எங்கே உன் சோழ நாடு? அந்த நாடுகளை 1947 இல் பிரிட்டிஷ்காரன் ஹிந்திக்காரனிடம் கொடுத்தான். பாடப்புத்தகத்தை தாண்டி சிந்தனை செய் நன்பா....