Wednesday, August 17, 2016

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு (காவி வெறியர்கள் படிக்க வேண்டாம்)

Kashmir dispute

மக்களே ராணுவத்தை கல்லெறிந்து விரட்டும்போது எதற்காக இந்த காஷ்மீர் பிரச்சினை?


போய்த்தொலை என்று விடப்பட்டிருக்க வேண்டிய உதவாக்கரைகள் வாழும் ஒரு நிலப்பகுதியை கைக்குள் வைத்துக்கொள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை லட்சம் கோடிகள் மக்கள் பணம், எத்தனை படைவீரர்களின் உயிர்கள், எத்தனை விதவைகள்.... எதற்கு இந்த வீராப்பு? எந்த ஒரு ராணுவமும் தன் உயிர் இழப்புக்களை குறைத்தே காட்டும். உண்மையில் எத்தனை பேர்களை கொன்றார்களோ தெரியாது...

தீர்மானம் எடுப்பவர்கள் எல்லோரும் பணக்கார அரசியல்வாதிகள். அவர்களுக்கு யுத்தமும் வேண்டும் காஷ்மீரும் வேண்டும். ஆனால் அவர்களின் பிள்ளைகள் யாரும் காஷ்மீரில் ராணுவத்தில் சேர்ந்து போரில் நேரடியாக ஈடுபடமாட்டார்கள். 

வடகிழக்கு மாநிலங்களில் கற்பழிப்புகள் நடாத்துவோம், அவர்களை மாற்றாந்தாய் பிள்ளை போல் பார்ப்போம். போலீஸ் பாதுகாப்பில் மசூதியை உடைப்போம், உடைத்த மசூதியையும் கட்டிக்கொடுக்கவும் மாட்டோம். தீவிரவாதத்தை வெறுக்கும்படி அந்த இளைஞர்களை கேட்போம். நடக்குமா இதெல்லாம்?

இங்கே பேஸ்புக்கில் இருந்து கொண்டு சில காவி வெறியர்கள் வீர வசனம் பேசுவர். "சண்டைக்கு வாடா, கொண்ணுடுவேன்.. கிழிச்சுடுவேன், மேப்பிலிருந்தே தூக்கிடுவேன், ஐயாம் வெய்டிங்க்" எண்டெல்லாம் பாகிஸ்தானிடம் பஞ்ச் டயலாக் பேசும் ஆனால் வந்து ராணுவத்தில் சேரு எண்டு சொன்னால் "வீட்டில விடமாட்டாங்க பாஸ்" எண்டு ஜகா வாங்கிடும். 

காஷ்மீரிகளிடம் கல்லடி வாங்கும் நிலைக்கு இந்திய ராணுவம் தள்ளப்பட்டிருப்பது அதர்மம். 

ஒரே தீர்வு... பிரச்னையை விட்டு ஒதுங்குங்கள். மீதமாகும் பல பில்லியன் கோடி பணத்தில் முழு இந்தியாவின் வாழ்க்கைத்தரத்தையும் வெகுவாக உயர்த்தி மிகப்பெரிய முன்னேற்றமடைந்த நாடாக மாற்ற முடியும். இந்த முஸ்லிம்கள் வசிக்கும் காஷ்மீர் இந்திய வளர்ச்சியின் தடைக்கல்லாக இருக்கும் என்பதை அறிந்தே வெள்ளைக்காரன் அதை பாகிஸ்தானுடன் சேர்க்காமல் விட்டுவிட்டு சென்றான். எத்தனை காலம்தான் விரும்பாதவர்களை அடக்கி ஆட்சி செய்ய முடியும்?

பாகிஸ்தானுடன் இருந்த பங்களாதேஷ் இன்று இந்தியாவின் நண்பன். காஷ்மீரை மேலும் மேலும் ரத்தக்களரியாக்கி அதற்காக முடிவில்லாமல் பெறுமதியான இந்திய ராணுவ வீரர்களின் உயிர்களை பலி கொடுப்பதை விட காஷ்மீரை இந்தியாவுக்கு ஆதரவான ஒரு நட்பு நாடாக மாற்றி ஐநாவில் இன்னுமோர் ஆதரவுடன் மேல் நோக்கிச்செல்வது இந்தியாவின் வல்லரசு கனவை நனவாக்கும்.

இப்போதே இந்தியா சார்பான ஒரு நாட்டை இந்தியாவே உருவாக்கினால், போராட்டம் மூலம் அல்லது அந்நிய தலையீடுகள் மூலம் நாடு உருவாகி அது பாகிஸ்தானின் நட்பு நாடாக வருவதை தடுக்கலாம். இப்போது உள்ள ஆட்சிக்கு உதவி செய்து காஷ்மீரை நட்பு நாடாக்கி கொள்வதே இந்த முடிவற்ற காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவுக்கு சாதகமாக தீர்த்து கொள்ளும் சிறந்த ராஜதந்திர வழி.

நடு நிலையாக சிந்தித்து கமெண்ட் போடுங்கள்.

Monday, August 15, 2016

இந்திய தமிழர்களின் உண்மையான தொப்புள்கொடி உறவுகள் யார்? Sri Lankan Estate Tamils



தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் மலையகத்தமிழர்களே அன்றி யாழ்ப்பாண உயர்சாதிகள் அல்ல. யாழ்ப்பாண தமிழர்கள் சித்தி, சித்தப்பாவின் பிள்ளைகள் போன்று. ஆனால் சாதி அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறான போராட்டங்கள் மூலம் இலங்கையில் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்தியத்தமிழர்களை மறைத்துவிட்டார்கள்.

நூற்றாண்டுகளாக அடிமைகள் போன்று இலங்கை அரசாலும் யாழ்ப்பாணத்தமிழர்களாலும் ஆளப்படும் இந்திய தோட்டத்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களின் வீடுகளிலும் கொழும்பிலுள்ள அவர்களின் வர்த்தக நிலையங்களிலும் அடிமை சேவகம் பார்த்து வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? 

இந்தியத்தொழிலாளர்களின் சனத்தொகை இன்று இலங்கை தமிழர்களின் சனத்தொகையை கடந்து சென்றுகொண்டிருப்பது இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டது. 

என்றாலும் புலிகளின் அடிவருடிகளாக செயல்படும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ வேண்டுமென்றே போராட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறார்கள் என்பதே உண்மை.


பாலியல் தொழில் (Prostitution)

தாய்லாந்து இந்தியாவில் வேசித்தொழில்

 

பாலியல் தொழில், வேசித்தொழில், தேவடியாள் தொழில் (இந்த சொல்லின் பாவனை கிராமப்புற தமிழில் அதிகம்), உடம்பை விற்றல் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த தொழில் திருமணம் செய்யாமல் அல்லது திருமணத்துக்கு புறம்பாக ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவதை குறிக்கும். சம்பளத்தை பொறுத்து பாலியல் தொழில், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என்று பெயர்கள் வேறுபடும். எல்லோரும் செய்வது ஆணின் உடம்பை கட்டிப்பிடிப்பதற்கு பணம் பெறுவதே.  

இந்த தொழிலில் விரும்பி இணையும் பெண்கள் அதிகம். இவர்கள் தன் வருமானத்துக்காக பொது இடங்களில் பிச்சையெடுப்பதை கேவலமாக நினைத்து இந்த "தொழிலில்" இணைகின்றார்கள். (இந்த இடத்தில் பிச்சையெடுத்தால் கூட எடுப்பேனே தவிர வேசித்தொழில் செய்யமாட்டேன் என்று வாழும் பிச்சைக்கார பெண்களை பாராட்டியே ஆகவேண்டும்.  கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுவதும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது. 


இது இவ்வாறு இருக்க சில உலகின் கேவலமான கலாச்சாரத்தை கொண்ட ஒரு சில நாட்டு அரசுகளே உயிரினும் மேலாக கண்ணியமாக மதிக்க வேண்டிய தன் நாட்டு பெண்களை, தாய்க்குலத்தின் சதையை காம வெறிகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கும் விற்று பணம் சம்பாதிக்கும் உத்தியோகபூர்வமான வேசித்தனமும் நடைபெறுகிறது. 

இப்போது இந்தியாவும் முன்னரைவிட இத்தொழிலில் தாய்லாந்தை பார்த்து "முன்னேறி" வருகிறது. மும்பையில் உள்ளது போன்று ஏனைய இடங்களிலும் இந்த தேவடியாள் தொழில் சிறக்க வேண்டுமாம்.

எத்தனை பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் இதனால் சீரழிகின்றன. பாலியல் நோய்கள் ஏற்பட்டு வயதானபின் மனநோய் ஏற்பட்டு "கஸ்டமர்" இல்லாமல் அந்த பெண்கள் ஓரங்கட்டப்பட்டு பித்துப்பிடித்து அலையும் காட்சிகள். இவற்றை இந்த நாட்டு அரசுகள் சிந்திப்பதில்லை.

தாய்லாந்தில் பௌத்த மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை. 

இந்தியாவில் இந்து மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ யூத மதங்கள் இதை நிறுத்துவதில்லை என்பது போக அதற்கும் மேலே ஒரு படி போய் அப்பா அங்கிள் கேம் என்ற ஓரினப்புணர்ச்சியையுமல்லவா (Homosexual) ஆதரிக்கிறது. 

மனிதனை ஒழுக்க ரீதியாக நல்வழிப்படுத்த முடியாத மதங்கள் இருந்தென்ன பயன்? இதைத்தானே பகுத்தறிவு தந்தை பெரியார் ஈவேரா வும் கேட்டார்.


மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.